திண்டுக்கல்: கொடைக்கானல் லாஸ்காட் சாலையில் சுற்றுலா வழிகாட்டிகள் பெயர்ப்பலகை வைப்பதில் பாஜக, திமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, பாஜக நிர்வாகிகள் ஒரு சிலர் 'கோடை செந்தாமரை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம்' என்றப்பெயர் பலகையினை வைத்துள்ளனர். இந்நிலையில் அச்சங்கத்திலிருந்து பிரிந்து திமுகவில் இணைந்த சிலர், அங்கு 'திமுக சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம்' எனப் பெயர் பலகை வைக்க ஏற்பாடுகள் செய்தனர். இதனையறிந்த பாஜகவினர் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அவ்விரு கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்துடன் பெயர்ப்பலகை வைத்து கொடியும் ஏற்றினர். இச்சம்பவம் கொடைக்கானல் மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'உதயநிதி காட்டிய செங்கலை வைத்து முதலமைச்சர் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டுவாரா?' - ஆர்.பி. உதயகுமார் கேள்வி