லாரி மோதிய விபத்தில் - பள்ளி ஆசிரியர் தலை நசுங்கி உயிரிழப்பு

author img

By

Published : Sep 22, 2021, 6:43 PM IST

விபத்து குறித்த சிசிடிவி காட்சி

தர்மபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் டிப்பர் லாரி மோதிய விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தர்மபுரி: அதகபாடி அடுத்த ராமன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (43). இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகளும், மூன்று வயதில் மகனும் உள்ளனர். முத்துராஜ், மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவர், இன்று (செப்.22) காலை பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார்.

இண்டூர் பேருந்து நிலையம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, டிப்பர் லாரியின் கடைசி சக்கரம் மோதியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரி முத்துராஜின் தலையின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

விபத்து குறித்த சிசிடிவி காட்சி

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இண்டூர் காவல் துறையினர், ஆசிரியரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆசையாக வாங்கிய கார் - நிலைக்காத சந்தோஷம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.