முனியப்பன் சாமி சிலைக்கு தீ - காவல் துறையினர் விசாரணை!

author img

By

Published : Apr 23, 2021, 3:25 PM IST

_pennagaram_temple_fire_

தர்மபுரி: பென்னாகரம் அருகே முனியப்பன் சாமி சிலைக்கு தீ வைத்து எரித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சாலையில் முனியப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று (ஏப்.22) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். தீயில் சாமி சிலை எரிவது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காலையில் கிராம மக்கள் வந்து பார்த்தபோது சிலை எரிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

முனியப்பன் சுவாமி சிலைக்கு தீ
முனியப்பன் சுவாமி சிலைக்கு தீ

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமி சிலை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை கைது செய்து கடும் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

பண்ருட்டியில் பலாப்பழ விலை வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.