கொட்டி தீர்த்த கனமழை: பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு

author img

By

Published : Aug 1, 2022, 6:57 PM IST

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து  45000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளது.

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 45000 கன அடியாக அதிகரிப்பு

நேற்று (ஜூலை 31) காலை நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 18,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 21,000 கன அடியாக இருந்தது. மேலும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 24,000 கன அடியாக உயர்ந்தது.

தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று மாலை நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 40,000 கன அடியாக உயர்ந்தது.

இன்று (ஆக 01) காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 45,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இதையும் படிங்க: Video:நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விடாது பெய்யும் அடைமழை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.