தர்மபுரி தேர் விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு...!

author img

By

Published : Jun 13, 2022, 7:50 PM IST

Updated : Jun 13, 2022, 11:10 PM IST

தர்மபுரி தேர் விபத்து

தர்மபுரி அருகே காளியம்மன் கோயில் தேர் திருவிழாவின்போது தேரின் அச்சாணி முறிந்து சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த எட்டு பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோயில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா இன்று (ஜூன் 13) நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

அப்போது தேர் வீதியில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் சாய்ந்ததில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் மனோகரன், சரவணன் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரி தேர் விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு...!

எட்டு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தேர் விபத்தில் உயிரிழந்த சரவணன்
தேர் விபத்தில் உயிரிழந்த சரவணன்

இந்தநிலையில், தேர் விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன்
தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன்

இதையும் படிங்க : தர்மபுரி தேர் விபத்து குறித்து எம்.பி.செந்தில் குமார் விளக்கம்!

Last Updated :Jun 13, 2022, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.