தர்மபுரி மாவட்டம், மாதேஹள்ளி கிராமத்தில் இன்று (ஜூன் 13) நடந்த தேர்த்திருவிழாவின்போது அச்சாணி முறிந்து தேர் சரிந்து விழுந்தது. அப்போது தேருக்கடியில் 5 பேர் சிக்கிக்கொண்டனர்.
தேரின் இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சரவணன் என்பவரின் உறவினர் பென்னுசாமி கூறுகையில், "தேர் திருவிழாவின் போது திடீரென தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தவிர்க்க முடியாத பாதிப்பு. இந்த விபத்தில் எனது அக்காவின் கணவர் உயிரிழந்தார். இப்போது அக்காவின் வாழ்க்கையே முடிந்துவிட்டது. விபத்திற்கு காரணம் என்று யார் மேலும் பழிபோட முடியாது" என்றார்.
இதையும் படிங்க: தர்மபுரி தேர் விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு...!