Farm Laws: 'போராடிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து' - கே.எஸ். அழகிரி

author img

By

Published : Nov 19, 2021, 10:59 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடலூர்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பல போராட்டங்களை மேற்கொண்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை (Farm Laws) திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெல்லியில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் (Farmers protest) ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்னையை உலக மக்கள் திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு அகிம்சை முறையில் நடைபெற்றது. சர்வாதிகார ஆட்சி செய்த மோடி ஒருமுறைகூட விவசாயிகளை சென்று பார்க்கவில்லை' என்றும் கூறியுள்ளார்.

கே.எஸ். அழகிரி

இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக முடிந்ததால் தற்போது மோடி விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Govt to Repeal Farm laws: 'உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.