கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே நலன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன். இவர் வீட்டு பசு, மூன்றாவது முறையாக கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது.
அந்த கன்றுக்குட்டி அரையடி உயரத்தில் இருக்கிறது. இதன் காரணமாக கன்றுக்குட்டி தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவித்துவருகிறது.
இந்த கன்றுக்குட்டியை பார்க்க சுற்றுவட்டார பகுதி மக்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளனர். குழந்தையை விட மிகக் குறைவான உயரத்தில் இருப்பதால், அந்தக் கன்றுக்குட்டி மீது விஜயன் குடும்பத்தினர் அதிக பாசத்துடன் இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒற்றைக் காட்டு யானையை விரட்ட கோரிக்கை