கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் வருண் குமாரும், கீழப்பாளையூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சுதாகரன் என்பவரும், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும், இரண்டாம் ஆண்டு இன்ஜினியர் படிக்கும் மாணவி ஒருவரை, இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதால், இரண்டு மாணவர்களுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல், கல்லூரி செல்வதற்காக சுதாகரனும், வருண் குமாரும், கல்லூரி பேருந்திற்காக, கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்லூரி மாணவியியை காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்தில்,
இரண்டு மாணவர்களும் மற்றும் அவர்கள் சக கல்லூரி மாணவருடன் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் உருட்டு கட்டை கொண்டு கொடூரமாக தாக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்த, பொதுமக்கள் பயந்து தலை தெரிக்க ஓடி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர்களான சுதாகரன், வருண்குமார், பார்த்திபன், பாரதி, சக்தி, ராகுல் ஆகிய 6 கல்லூரி மாணவர்களையும், கைது செய்து வழக்கு பதிந்தனர். கல்லூரி மாணவி காதலிப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையால், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டை கொண்டு தாக்கி கொண்ட, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மோசடி புகார்: வழக்கை ரத்து செய்யக் கோரிய செந்தில்பாலாஜி மனு மீது அக்.31 தீர்ப்பு