சிதம்பரம் - கொள்ளிடக்கரையோர கிராமங்களில் வெள்ளம்: கழுகுப்பார்வை காட்சிகள்

author img

By

Published : Aug 7, 2022, 8:53 PM IST

வெள்ளப் பெருக்கால் தண்ணீரால் சூழ்ந்த வீடுகள் - வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கழுகு பார்வை

சிதம்பரம் உள்ள காவிரி கொள்ளிடக்கரையோர திட்டுக்கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருக்கும் கழுகுப்பார்வை காட்சி... இதோ...

கடலூர்: காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து வரும் உபரி நீர் முக்கொம்பு கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக நேற்று கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோர திட்டுக்கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், கீழகொண்டலபாடி உள்ளிட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

சிதம்பரம் - கொள்ளிடக்கரையோர கிராமங்களில் வெள்ளம்: கழுகுப்பார்வை காட்சிகள்

இதையும் படிங்க:வங்கிகளில் ரூ.8,045 கோடி கடன்பெற்று செலுத்தாத விவகாரம்; 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.