நெல் நடவில் ஓவியம்.. கடலூர் விவசாயி அசத்தல்!

author img

By

Published : Nov 27, 2022, 4:46 PM IST

நெல் நடவு ஓவியத்தில் அசத்தும் பாரம்பரிய விவசாயி..

கடலூரில் நெல்செல்வம் என்ற விவசாயி, நெல் நடவில் ஓவியம் வரைந்து பாரம்பரிய நெல் பயிரிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் விவசாயம் செய்து வருபவர், நெல்செல்வம். இவர் இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய நெல் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் படியாக, பாரம்பரிய நெல் நடவில் நெல் பயிரினை கொண்டு ஓவியம் வரைந்துள்ளார்.

குறிப்பாக சேரர், சோழர், பாண்டியர் ஆகிய பெயர்கள் மற்றும் அவர்களது சின்னங்கள் ஆகியவற்றை வரைந்துள்ளார். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தின் ஓவியம் பலரையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் இந்த நடவு ஓவியத்தையும் பாரம்பரிய நெல் விவசாயத்தையும், சுற்றுப்புற விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் பார்த்தும், பாரம்பரிய நெல் விவசாயம் குறித்து கேட்டறிந்தும் செல்கின்றனர்.

விவசாயி நெல்செல்வம் பேட்டி

இதையும் படிங்க: நில அபகரிப்பு... 211 புகார்களின் எடை 12 கிலோ... எந்த பயனும் இல்லை.. விவசாயி வேதனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.