கடலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

author img

By

Published : Aug 25, 2021, 10:57 AM IST

அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், பண்ருட்டி உள்ளடக்கிய கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக எம்சி.சம்பத்தும், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளடக்கிய கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரனும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளடக்கிய கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் மாவட்டச்செயளார்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :இந்தாண்டு பட்ஜெட் ஒரு குறை பட்ஜெட் - ஆ. ராசா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.