கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழிசைச் சங்கத்தின் 34ஆம்ஆண்டு நாட்டியப் பெருவிழா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் இசை நாடகக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு நவரச நாயகி விருது வழங்கப்பட்டது. இதில், மேற்கு மண்டல ஐஜி கலந்துகொண்டு விருதினை நர்த்ததி நடராஜனுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திருநங்கைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நர்த்தகி நடராஜனிடம், திருநங்கைகள் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏன் என்ற கேள்வியுடன் பேட்டியை தொடங்கினர்.
இதற்குப் பதில் அளித்த நர்த்தகி நடராஜன், 'திருநங்கைகள் விநோதமான உலகத்திலிருந்து வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தை உடைத்து எறிந்து விட்டார்கள். சமூகத்தில் ஏன் திருநங்கைகள் இப்படி நடந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் வாழ்கிறார்கள் எனக் கேட்க முடியாத அளவிற்கு பெரும்பான்மையானவர்கள் சுயமரியாதையுடன் திறமையுடன் சொந்த முயற்சியால் வளர்ந்து வருகிறார்கள்.
சமூகம் வேறு, நாம் வேறு இல்லை. இந்த உலகில் திருநங்கைகள் வாழ்வதையும், போராடுவதையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளவேண்டும். திருநங்கைகளும் காலத்தின் ஓட்டத்தை புரிந்துகொள்வார்கள். சமூகத்திற்கு சில ஒழுக்க நெறிகள் உள்ளது. திருநங்கைகளும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். எனவே சமூகத்தை ஒரு குடும்பமாக நினைக்க வேண்டும்.
இழிவான நிலைகளில் வாழ்கிறோம் என்பதை வெறுக்க வேண்டும். எந்தத் துன்பம் வந்தாலும், பசித்தாலும் தன்மானத்தை இழக்கக்கூடாது' என மன உருக்கத்துடன் பதிலுரைத்தார்.
இதையும் படிங்க: