குடிபோதையில் மனைவியைக் கொன்ற கணவன்!

author img

By

Published : Sep 16, 2021, 1:18 PM IST

husband-killed-wife-in-coimbatore

குடிபோதையில் மனைவியை கொலை செய்து விட்டு தப்ப முயன்ற கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர்: கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தகுமார் (47). இவருக்கு செல்வி (45) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று (செப்.15) இவரது மகன், மகள் இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் ஆனந்தகுமார் குடிபோதையில் செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த செல்வி தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஆனந்த குமார், செல்வியை கத்தியால் குத்தினார். தொடர்ந்து செல்வி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து இதுகுறித்து காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.

அப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். இதனை அறிந்த ஆனந்தகுமார் தப்பி ஓட முயன்ற நிலையில், அவரை துரத்திச் சென்று காவல்துறையினர் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது இல்லத்துக்கு சென்று பார்க்கும்போது செல்வி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

தொடர்ந்து செல்வியின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆனந்தகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - நைஜீரியர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.