சிலிண்டரை சரியாக மூடாததால் ஏற்பட்டதா தீ விபத்து?

author img

By

Published : Nov 13, 2022, 6:20 PM IST

கோவை

கேஸ் கசிந்து தீப்பற்றிய வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த வட மாநிலத் தொழிலாளியை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

கோவை: கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிஜாய். கோவை டி.கே. வீதியில் தங்கி தங்க நகைத்தொழில் செய்து வருகிறார்.

வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டரை பிஜாய் சரிவர மூடாமல் விட்டதாக கூறப்படுகிறது. கேஸ் கசிந்து தீப்பற்றிய நிலையில், வீடு முழுவதும் தீப்பரவி ஓடுகள் விழத்தொடங்கி உள்ளன. சத்தம் கேட்டும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்ததில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பிஜாய் தவித்து உள்ளார்.

லேசான தீக்காயங்களுடன் வீட்டினுள் சிக்கியிருந்த பிஜாயை பொதுமக்கள் மீட்டனர். அரசு மருத்துவமனையில் பிஜாய் சிகிச்சைப்பெற்ற நிலையில், திடீரென தீப்பற்றியதற்கு என்ன காரணம் என ஆர்.எஸ். புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: முகநூல் காதலனை தேடி வந்த காதலி அடித்துக்கொலை - காதலன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.