பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல்

author img

By

Published : Sep 21, 2021, 3:01 PM IST

Pollachi

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (செப்.21) கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளிகள் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த் குமார், சதீஷ், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம், அருண்குமார் ஆகிய ஒன்பது பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்பின் அவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.