'தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்' - முதலமைச்சர் நம்பிக்கை

author img

By

Published : Nov 23, 2021, 5:11 PM IST

Updated : Nov 23, 2021, 5:50 PM IST

முதலமைச்சர் நம்பிக்கை

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் (ஒரு லட்சம் கோடி டாலர்) பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை எனவும், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை கொடிசியா அரங்கில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) கையெழுத்தாகின.

கோவையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு
முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு

இந்த மாநாட்டில் ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 7 நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ளது. ரூ.485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் இந்த நிறுவனம் மூலம் 1960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • கோவையில் நடைபெற்ற ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ மாநாட்டில் 82 திட்டங்கள் மூலம் ரூ.52,549 கோடி முதலீட்டில் 92,420 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களைத் தொடங்கி வைத்தேன். pic.twitter.com/jsqIpPmJWO

    — M.K.Stalin (@mkstalin) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தவிர 13 ஆயிரத்து 413 கோடி ரூபாய் மதிப்பில் 13 புதிய நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 11,681 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடிசியா அமைப்பின் பொன்விழா நிறைவையொட்டி காலப்பேழை புத்தகம்
கொடிசியா அமைப்பின் பொன்விழா நிறைவையொட்டி காலப்பேழை புத்தகம்

மேலும், பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

அரசின் பணி

மாநாட்டில், மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 வின் கைபேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும், "தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021” மற்றும் கொடிசியா அமைப்பின் பொன்விழா நிறைவையொட்டி காலப்பேழை புத்தகத்தை (Coffee Table Book) ஆகியவற்றை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை 6 மாதத்தில் சாதித்து இருப்பதாக தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர். அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மக்களைக் காப்பது தான் அரசின் பணி. இதில் இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021
தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021

நம்பர் ஒன் தமிழ்நாடு

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் - முதலமைச்சர் நம்பிக்கை

5 மாதங்களில் இது 3வது முதலீட்டாளர் மாநாடு. அரசின் மீது நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றனர். ஜூலை, செப்டம்பர், நவம்பர் என இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு. இதே வேகத்தில் போனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விரைவில் உருவாகும். பல மாநில முதல்வர்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக என் பெயரைச் சொல்கின்றனர். இது அரசுக்குக் கிடைத்த பெருமையல்ல. மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்லும் வகையில் செயல்பட வேண்டும்.

கோவை கொடிசியா அரங்கில் - முதலமைச்சர்
கோவை கொடிசியா அரங்கில் - முதலமைச்சர்

தொழில் புரட்சி

இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 22 மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் ஊர்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும். 2000ல் கலைஞர் ஆட்சியில் டைடல் பார்க் துவங்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத் துறையில் அதன் தொடர்ச்சியாக தொழில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக டைடல் பார்க் ஏற்படுத்தப்படும்.

மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 வின் கைபேசி செயலி
மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 வின் கைபேசி செயலி

முதன்மை மாநிலம்

பொள்ளாச்சி பகுதியில் 21 கோடியில் தென்னை நார் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக ஒரு தொழிலுக்கு என இல்லாமல் பல்வேறு தொழில்களுக்கு கோவை மையமாக உள்ளது. கோவையில் தொடாத தொழில்கள் இல்லை. பாராட்டத்தக்க நகரமாகக் கோவை உருவாகி வருகின்றது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக கோவை உள்ளது. தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் (ஒரு லட்சம் கோடி டாலர்) பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருமென்ற நம்பிக்கை உள்ளது.

சூலூரில் தொழில்பேட்டை

வான்வெளி, பாதுகாப்புத் துறையில் கோவை தொழில் துறையினர் கவனம் செலுத்த வேண்டும். சூலூரில் தொழில் பேட்டை அமைக்கப்படும். போட்டியை வெல்லும் அளவில் நமது தயாரிப்புகள் இருக்க வேண்டும். காஞ்சிபுரம் , கிருஷ்ணகிரி மாவட்டங்களைப் போல மின்னணு பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலீட்டாளர் மாநாடு
முதலீட்டாளர் மாநாடு

தொழில் வளர்ச்சி

கோவை என்றாலே இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும், கண்டுபிடிப்புகளும் தான் நினைவுக்கு வரும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வர வேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். திட்டங்கள் வெற்றி பெற தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Galwan Valley clash: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு வீர் சக்ரா விருது!

Last Updated :Nov 23, 2021, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.