வியாபாரி வீட்டு கதவை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

author img

By

Published : Sep 26, 2021, 6:26 AM IST

v

கோயம்புத்தூர்: குனியமுத்தூரில் உள்ள வியாபாரி ஒருவரின் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் குனியமுத்தூர் பிருந்தாவன் பகுதியை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் வியாபார நிமித்தமாக செப்டம்பர் 23ஆம் தேதி வெளியூர் சென்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தையின் வீட்டிற்கு சென்றார்.

வெளியூர் சென்ற முபாராக் அலி இரவு வீடு திரும்ப தாமதமானதால் அவரும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் இருவரும் உள்ளே சென்று பார்க்கும்போது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள், வியாபாரத்திற்கு வைத்திருந்த 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணம், விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

v
வீட்டின் கதவு உடைப்பு

உடனே இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து முபாரக் அலி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை நிபுனர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து கொள்ளையடித்த சென்றவர்களை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியிலேயே பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிசிடிவி இருந்தா என்ன - அலேக்காக பைக்கை திருடும் பலே கொள்ளையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.