நெருப்பாற்றில் இருப்பது போல் அரசியலில் பெண்கள் - சுப்புலட்சுமி ஜெகதீசன்

author img

By

Published : Jul 23, 2020, 6:56 AM IST

திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்

சென்னை: நெருப்பாற்றில் இருப்பது போல் அரசியலில் பெண்கள் உள்ளோம் என திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அடக்குமுறை குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் காணொலி கட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களில் பெண்கள் மீது 31 விழுக்காடாக உள்ளது. பொள்ளாச்சி விவகாரம் உள்ளிட்டவற்றுள் சிக்கியவர்கள் சுதந்திரமாக உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்கள் இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் தாமதமாகிறது. அதனை விசாரிப்பதற்கு காவலர்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இல்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஒழுக்கமின்மை நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு தொழில்நுட்பமும் காரணம். அரசியலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்னை சாதாரணம் அல்ல. கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஆண்களிடமிருந்து வரவேற்பை விட, கீழே தள்ளும் போட்டி பொறாமையே உள்ளது. நெருப்பாற்றில் இருப்பது போல் அரசியலில் பெண்கள் உள்ளோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.