போதையில் இருவர் மோதல் - கத்தியால் ஒருவரைஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியீடு

author img

By

Published : Sep 10, 2022, 7:15 PM IST

Updated : Sep 10, 2022, 7:34 PM IST

Etv Bharat போதையில் இருவர் மோதல்

அரும்பாக்கம் அருகே குடிபோதையில் இருவர் ஒருவரையொருவர் கத்தி மற்றும் கற்களால் தாக்கிக்கொள்ளும் அதிர்ச்சியூட்டம் வீடியோ காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: அரும்பாக்கம் 100அடி சாலையிலுள்ள எம்எம்டிஏ பேருந்து நிறுத்தத்தில் போதையில் இருந்த இருவர் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த போதிலும் கீழே கிடந்த கற்களை எடுத்து மாறி மாறி தாக்கி கொண்டனர். எப்போதுமே பரபரப்பாக காணப்படும் எம்எம்டிஏ பேருந்து நிறுத்தத்தில் ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சிதறி ஓடினர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை நடத்தினர்.

போதையில் இருவர் மோதல்

விசாரணையில், கத்தியால் வெட்டிக்கொண்டவர்கள் எம்எம்டிஏ பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் தங்கி வேலை செய்யும் ஈக்காட்டு தாங்கலைச் சேர்ந்த கண்ணன் (50) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் (48) என்பது தெரியவந்தது. குடிபோதையில் இருவரும் மாறி மாறி கத்தி மற்றும் கற்களால் தாக்கி கொண்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்போது குடிபோதையில் இருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: அந்தியூர் அருகே 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்... 7 பேர் கைது...

Last Updated :Sep 10, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.