Rowdy baby surya-வைக் கைது செய்... இளம்பெண் குமுறல்

author img

By

Published : Nov 22, 2021, 7:57 PM IST

Updated : Nov 22, 2021, 8:18 PM IST

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா

ரவுடி பேபி சூர்யாவைக் கைது செய்ய வேண்டும் என அவரால் பாதிக்கப்பட்டப் பெண் தெரிவித்துள்ளார்.

சென்னை: கடந்த சில நாள்களாக டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா குறித்தப் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக ரவுடி பேபி சூர்யா குடும்பப் பிரச்னைகளில் சிக்கி, கஷ்டத்தில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து, அவர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்குப் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தனம் உள்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 30ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவுடிபேபி சூர்யாவால் பாதிக்கப்பட்டப் பெண் தனம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனது இரு குழந்தைகளும் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போனை பயன்படுத்தி வந்தனர்.

அப்போது ரவுடிபேபி சூர்யா வெளியிட்ட ஆபாசப் பேச்சுக்கள் நிறைந்த வீடியோக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவரைத் தொடர்பு கொண்டு, இது குறித்து முறையிட்டேன்.

’ரவுடி பேபி சூர்யாவைக் கைது செய்’

தற்கொலை செய்துகொள்வேன்

இதனால் என்னை பழி வாங்க ரவுடி பேபி சூர்யா தனது ஆண் நண்பருடன் இணைந்து, எனது புகைப்படம் மற்றும் தொடர்பு எண்ணை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

ரவுடி பேபி சூர்யா குடும்ப பிரச்சினைகளில் சிக்கி, கஷ்டத்தில் இருக்கும் பல பெண்களைக் குறிவைத்து அவர்களுக்கு அதிகப்பணம் தருவதாக மூளைச்சலவை செய்து சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கிறார்.

இது குறித்து தட்டிக் கேட்பவர்களை ரவுடி பேபி சூர்யா பல்வேறு விதமாக மிரட்டி வருகிறார். அரசியல் பின்புலம் இருப்பதாகவும், காவல் துறையிலிருந்து முதலமைச்சர் வரை யாரிடம் சென்று புகார் அளித்தாலும் எதுவும் செய்ய முடியாது எனவும் ரவுடி பேபி சூர்யா பொதுவெளியில் வீடியோ பதிவிட்டு மிரட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் கதறல்

சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யாவின் செயல்பாடுகளைத் தட்டிக்கேட்கும் யாராக இருந்தாலும், அவர்களின் குழந்தைகள், பெரியவர்கள் என வித்தியாசம் பாராமல் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் ரவுடி பேபி சூர்யா பதிவிட்டு மிரட்டுகிறார்.

ரவுடி பேபி சூர்யாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. காவல் துறையினர் அவரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்" என்றார்.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் வைரலாகும் பாலியல் குற்றச்சாட்டு; அரசு பள்ளி ஆசிரியரை முற்றுகையிட்ட பெற்றோர்!

Last Updated :Nov 22, 2021, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.