"பாஜகவுடனான உறவு முடிந்தது" - அண்ணாமலைக்கு சூர்யா சிவா அட்வைஸ்

author img

By

Published : Dec 6, 2022, 2:45 PM IST

பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்

பாஜகவிலிருந்து விலகுவதாக அண்மையில் கட்சியிலிருந்து சஸ்பண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை: பாஜகவிலிருந்து விலகுவதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அணிகள் 4 ஆனால் முழக்கம் ஒன்று.. அதிமுகவில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.