6 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடம் மாற்றம்

author img

By

Published : Aug 5, 2022, 8:39 PM IST

Updated : Aug 5, 2022, 8:45 PM IST

Etv Bharat 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

தமிழ்நாட்டில் ஆறு ஐஏஎஸ் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் ஆறு ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐஏஎஸ் அலுவலர்கள் ஜவஹர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக டி.எஸ். ஜவஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பொதுப்பணித்துறையின் முதன்மைச்செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடைத்துறை முதன்மைச்செயலாளராக கார்த்திக் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் மேலாண் இயக்குநராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச்செயலாளராக மங்கத் ராம் சர்மா, ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநராக ஆனந்த் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Last Updated :Aug 5, 2022, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.