ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை மக்களுக்கு வழங்கிய ஸ்டாலின்

author img

By

Published : Nov 25, 2021, 4:02 PM IST

Stalin issued orders of the retirement amount  retirement amount  Stalin issued retirement amount  retirement  mk stalin  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை  ஓய்வூதியம்  ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை மக்களுக்கு வழங்கிய ஸ்டாலின்  ஸ்டாலின்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை பயனாளிகள் பெற்று பயனடைந்துவருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டம், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகிய ஓய்வூதியத் திட்டங்களின் வாயிலாகவும் மக்கள் பயனடைந்துவருகின்றனர்.

மேற்கண்ட திட்டங்கள் மூலம் இதுநாள் வரை 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்துவருகின்றனர். இத்திட்டங்களுக்கென 2021-22ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.4807.56 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள்

தற்போது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில் மாநில அளவில் ஒரு லட்சத்து ஆயிரத்து 474 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 48 ஆயிரத்து 77 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 1,359 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 4,346 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 14 ஆயிரத்து 739 பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 28 ஆயிரத்து 209 பயனாளிகளுக்கும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2,397 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 1,732 பயனாளிகளுக்கும், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 554 பயனாளிகளுக்கும், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 61 பயனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்டவைகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஆயிரத்து 474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) பத்து பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிருவாக ஆணையர் க. பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர் என். வெங்கடாசலம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.