முதலமைச்சரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு!

முதலமைச்சரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு!
CM's Separate resolution passed: முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதன்படி, எந்த வித காரணமும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு, சட்டப்பேரையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட உள்ளது.

Loading...