School Leave : 18 மாவட்டங்களில் மழை - பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

author img

By

Published : Nov 25, 2021, 7:47 AM IST

schools-leave-in-tamilnadu-due-to-rain

School Leave: கனமழை காரணமாக புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவம்பர் 25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அன்மை காலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tamilnadu rain: இந்நிலையில்,தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.

School Leave: அதன்படி, இன்று (நவம்பர்.25) புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : ஆபத்தான முறையில் கரையை கடக்கும் பள்ளி மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.