பாடி மேம்பாலத்தில் ஆட்டோ மோதியதில் பயணி உயிரிழப்பு - ஆட்டோ ஓட்டுநர் கைது

author img

By

Published : Jan 16, 2022, 5:08 PM IST

விபத்தில் இறந்த பிரபாகரன்

பாடி மேம்பாலத்தில், தடுப்பு சுவர் மீது ஆட்டோ மோதி பயணி கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை: வில்லிவாக்கம், திருநகர் 15ஆவது தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் (43). இவர் டிவி மெக்கானிக் ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், நேற்று பாக்கியராஜ், பாடியில் இருந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இவர் வந்த ஆட்டோவை வில்லிவாக்கம், அகத்தியர் நகரைச் சேர்ந்த பிரபாகரன் (38) என்பவர் குடிபோதையில் ஓட்டி சென்று உள்ளார்.

இந்த ஆட்டோ, பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று ஆட்டோ மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பாக்கியராஜ், 20அடி உயரத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த டிரைவர், ஆட்டோ எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரனைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:Sexual harassment: கேரள விமான நிலைய அலுவலர் பணியிடைநீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.