சென்னையில் கை வரிசையில் ஈடுபடும் போதை ஆசாமிகள்

author img

By

Published : Apr 23, 2020, 10:50 AM IST

கை வரிசையில் ஈடுப்படும் போதை ஆசாமிகள்

சென்னை: தாம்பரத்தில் கஞ்சா அடித்துவிட்டு பிரச்னையில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியில் டாலர்ஸ் காலனி உள்ளது. அந்தக் குடியிருப்புப் பகுதியில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட வில்லாவை வடமாநிலத்தவர்களை வைத்து கட்டி வருகின்றனர். கட்டடம் கட்டுவதற்காக அவர்களை அதே பகுதியில் தங்கவும் வைத்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர்.

இந்நிலையில் அங்கு வசிக்கும் வடமாநிலத்தவரான ஜலாலுதீன் ஷேக், சபி ஷேக் ஆகியோர் கஞ்சா அடித்துவிட்டு சண்டை போட்டுள்ளனர். இதில் சபி ஷேக்கின் மண்டை உடைந்தது.

கை வரிசையில் ஈடுப்படும் போதை ஆசாமிகள்

மேலும் சிலர் கஞ்சா அடித்துவிட்டு அப்பகுதி வழியாக செல்பவர்களிடம் பண பறிப்பிலும் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து வெங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒருவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் காவலர்கள் அப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் ஆம் ஆத்மி நிர்வாகி மீது ஊபா சட்டம் பாய்ந்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.