கூடுதல் நேரம் ரேஷன் கடைகளைத் திறக்க உத்தரவு!

author img

By

Published : Oct 14, 2021, 11:28 AM IST

ordered-to-open-ration-shops-for-extra-timeordered-to-open-ration-shops-for-extra-time

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதிமுதல் 3ஆம் தேதிவரை மூன்று நாள்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடின்றி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கூடுதலாக நான்கு மணி நேரம் வேலை நேரத்தை நீட்டித்தும், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கத் தேவையான பொருள்களை இருப்புவைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பொருள்கள் வழங்குவது வழக்கம். இந்த மாதம் 4ஆம் தேதி வியாழக்கிழமை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

இதையடுத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதிமுதல் 3ஆம் தேதிவரை முதல் மூன்று நாள்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடின்றி வழங்க உணவுத் துறை இணை ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க : கரும்பு கொடு வண்டிய எடு - 'தல'க்கு தில்ல பாத்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.