வேப்பேரியில் துணி கடையில் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள்...

author img

By

Published : May 11, 2022, 1:18 PM IST

mysterious-people-who-broke-lock-and-stole-clothes-shop-in-vepery வேப்பேரியில் துணி கடையில் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள்...

வேப்பேரியில் துணி கடையில் பூட்டை உடைத்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை புரசைவாக்கம் சாலையில் ரமேஷ் என்பவர் துணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று (மே.10) இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து ரமேஷ் இன்று (மே.11) காலை கடைக்குச் சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான 100 சட்டை, 20 ஆயிரம் மதிப்பிலான டிராக் லோயர் போன்ற உடைகள், சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான 60 வாட்ச், 40 ஆயிரம் மதிப்பிலான ஜீன்ஸ் பேண்ட் மற்றும் செல்போன், பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் 3 பேர் கடையில் உள்ள அனைத்து பொருட்களையும் சுருட்டி கோணிப்பையில் கட்டிக்கொண்டு திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து, துணிக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ’அயன்’ பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.