சென்னை: ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரத் திரைப்படங்கள், இசை ஆல்பங்களை இயக்கியதில் கிடைத்த அனுபவத்தைப் வைத்து ‘கடசீல பிரியாணி’ மூலம் திரைப்பட இயக்குநராக நிஷாந்த் கலிதிண்டி அறிமுகமாகிறார்.
YNOT ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான YNOTX, நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை சந்தைப்படுத்தி விநியோகிப்பதில் சிறந்து விளங்குகிறது. ‘கடசீல பிரியாணி’ எனும் கிரைம்-நகைச்சுவை படத்தை YNOTX பெருமையுடன் வெளியிட உள்ளது. இத்திரைப்படத்தை அக்டோபர் 2021-இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ். சசிகாந்த் கூறுகையில், “சூப்பர் டீலக்ஸ், பக்கிரி, கேடி மற்றும் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை தொடர்ந்து, சுயாதீன படமான ‘கடசீல பிரியாணி’ YNOTX-இன் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் நிஷாந்த் கலிதிண்டி கவனிக்கப்பட வேண்டிய ஒரு திறமைசாலி. மேலும், மிக பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு இந்த படம் தகுதியானது, அதை திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்றார்.
நிஷாந்த் கலிதிண்டி (இயக்குநர்) கூறுகையில் - “பழிவாங்குவதற்காக கேரளாவுக்குச் செல்லும் தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று இளைஞர்கள் பற்றிய கதைதான் ‘கடசீல பிரியாணி’. இந்த தமிழ் படம் கேரளாவில் உள்ள அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் வெளியான முந்தைய படங்களைப் போல் இல்லாமல், இது ஒரு தனித்துவமான சுவாரஸ்யமான கதையுடன் கூடிய படமாக இருக்கும."
ஒரு மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் தயாரிப்பில், ஜூடா பால், நேய்ல் செபாஸ்டியன் ஆகிய அறிமுக இசையமைப்பாளர்களின் குழுவால் இந்த படத்திற்கு இசையமைக்கப்பட்டுள்ளது. இசையை ‘YNOT மியூசிக்’ வெளியிட உள்ளது. இதை பற்றிய அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பேன்சி நம்பருக்கு ரூ.17 லட்சம்: என்ன நம்பர் தெரியுமா?