கர்ப்பிணி மனைவியின் காதை வெட்டிய கணவர்.. சென்னையில் நடந்தது என்ன?

author img

By

Published : Nov 28, 2022, 5:56 PM IST

போதையில் மனைவி, மாமியாரை கத்தியால் வெட்டிய கணவர்

சென்னையில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் வெட்டிய கணவர் குடிபோதையில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

சென்னை: அயனாவரம் டாக்டர் அம்பேத்கர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராகேஷ். இவர் அயனாவரம் நாகையா தெருவை சேர்ந்த தெபேந்திரா என்ற பெண்ணை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் தற்போது தெபேந்திரா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், தாய் வீட்டிற்கு சென்ற தெபேந்திரா அங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தெபேந்திராவின் கணவர் ராகேஷ் குடிபோதையில் மாமியார் ஸ்டெல்லா மேரி வீட்டிற்கு சென்று தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்படவே ஒருவரை ஒருவர் கடும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ஒருகட்டத்தில் பிரச்சனை முற்றவே ராகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி தெபேந்திராவின் காது உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த மாமியார் ஸ்டெல்லா மேரியையை வெட்டியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார், படுகாயம் அடைந்த கர்ப்பிணிப் பெண் தெபேந்திராவை மற்றும் அவருடைய தாயார் ஸ்டெல்லா மேரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சென்னை அயனாவரம் காவல்துறையினர் சம்பவத்திற்கு காரணமான ராகேஷ் தீவிரமாக தேடிவந்த நிலையில், ராகேஷ் குடிபோதையில் தவறி விழுந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: சீன போராட்டத்தில் பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.