ஜன.31 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை!

author img

By

Published : Jan 11, 2022, 8:15 AM IST

Updated : Jan 11, 2022, 2:14 PM IST

ஜன.31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஆன் லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை நேரடி வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே வேளையில் ஆன் லைன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் வெள்ள அபாயத்தை முன்னதாகவே அறிந்து கொள்ளும் கருவி

Last Updated :Jan 11, 2022, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.