ஆபத்தான முறையில் பைக் சாகசம் - இளைஞர் கைது

author img

By

Published : Apr 6, 2022, 12:06 PM IST

சாலையில் ஆபத்தான பைக் சாகசம் - இளைஞர் கைது

சென்னை மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்த இளைஞரை போலீசார் கைது செய்து அவரது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறார்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இருசக்கர வாகன சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடுவோரை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை 37-க்கும் மேற்பட்டோர் கைது செய்ப்பட்டுள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சாலையில் ஆபத்தான பைக் சாகசம் - இளைஞர் கைது

இந்நிலையில், சென்னை கோயம்பேடு 100 அடி சாலை நெசப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதுடன் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் அடிப்படையில் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டவரின் வாகன எண் மற்றும் அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

சாலையில் ஆபத்தான பைக் சாகசம் - இளைஞர் கைது
சாலையில் ஆபத்தான பைக் சாகசம் - இளைஞர் கைது

விசாரணையில் அவர் பூந்தமல்லியை சேர்ந்த ஆஷிக் உசேன் (19) என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆஷிக் உசேன் சென்னையின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசங்களை நிகழ்த்தி அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றி வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆஷிக் உசேனை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.