இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை - பென்னிகுயிக் பிறந்த நாளில் ஸ்டாலின் செய்த மரியாதை...

author img

By

Published : Jan 15, 2022, 1:40 PM IST

இங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் - பென்னிகுயிக் பிறந்த நாளில் ஸ்டாலின் செய்த மரியாதை...

முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: தென் தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது முல்லை பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை தடுத்து முல்லை ஆற்றின் குறுக்கே அணையை கட்டி தென் தமிழ்நாட்டிற்கு தேவையான குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கலாம் என ஆங்கில அரசு முடிவு செய்து, அணை கட்டுவதற்காக ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக்கிடம் பொறுப்பை ஒப்படைத்தது.

பணியை ஏற்றுக்கொண்ட பென்னி குயிக் அணை கட்டுமான பணிகள் மேற்கௌ்ளும்போது, இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதி கட்டப்பட்டிருந்த அணை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக கூடுதல் நிதி தேவைப்பட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

இதற்கு ஆங்கிலேய அரசு நிதி ஒதுக்காமல் அணைகட்டும் திட்டத்தை கைவிட்டது. ஆனால், தென் தமிழ்நாட்டு மக்களின் துயரை துடைப்பதில் விடாப்பிடியாக இருந்த பென்னி குயிக், லண்டன் சென்று தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று அணை கட்டும் பணிகளை மீண்டும் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையை கட்டினார்.

இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

முல்லை பெரியாறு அணை கட்டப்பட்ட பிறகுதான் தென் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தவிர்த்து வேளாண் உற்பத்தி செழிப்படைந்தது. இதன் காரணமாக பென்னி குயிக்கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்ட மக்கள் அவரது பிறந்தநாளான ஜனவரி 15ஆம் தேதியை கொண்டாடி வருகின்றனர். இதில் குறிப்பாக தேனி அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தில் ஊர்பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து பாராம்பரிய முறைப்படி வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

பென்னி குயிக்கின் புகைப்படத்துடன் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று பென்னிகுயிக் நினைவு கலையரங்கம் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், கிராம மக்கள், விவசாயிகள், மற்றும் சிறுவர்கள் என அனைவரும் பென்னி குயிக்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தைச் செலவு செய்து அமைத்த, “கர்னல் ஜான் பென்னிகுயிக்” அவர்களின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 இன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து இலண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக் , தமிழ்நாடு மக்களுக்காகக் கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழ்நாட்டிற்கு குறிப்பாகத் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவடங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை
இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை

ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்குத் தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனவுறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையை கட்டி முடித்துள்ளார்.

அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15-ஆம் நாளை தமிழர்கள் விமர்சையாக கொண்டாடுகின்றனர். தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் தியாக பணிகளை நினைவுகூறும் வகையில் அவருடைய பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள்.

பென்னிகுயிக் பிறந்த நாளில் ஸ்டாலின் செய்த மரியாதை...
பென்னிகுயிக் பிறந்த நாளில் ஸ்டாலின் செய்த மரியாதை...

மேலும், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றித் தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மதுரை, தல்லாக்குளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அன்னாருடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகர பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக் அவர்களின் பெயர் சூட்டியுள்ளது.

தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும், ஒன்றிய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துக்களைத் தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தென் மாவட்ட மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களைக் கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சராக முதல் பொங்கல்: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.