பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்: பியூஷ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Nov 29, 2021, 6:35 PM IST

Updated : Nov 29, 2021, 6:55 PM IST

பியூஷ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம்

ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது, இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும்

வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும்
வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும்

இந்த நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் 2ஆவது பெரிய தொழிலான ஜவுளித் துறையில் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரிய அளவில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் 5% அடிப்படை சுங்க வரி, 5% விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூக நல வரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11% ஆக உயர்ந்ததே பருத்தி விலை ஏற்றத்திற்கான ஒரு முக்கிய காரணமாக கருதுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்
பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்

கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள

எனவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கவும், வேலை இழப்பைத் தடுத்திடவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தலையிட்டுப் பின்வரும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். ஊகவணிகத்தைத் தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.

வணிக விதிமுறைகளை சீரமைக்க வேண்டும்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் (e-auction) பங்கு பெற ஏதுவாக, தற்போதுள்ள விதிமுறைகளைத் தளர்த்தி குறைந்தபட்சம் 500 பருத்தி பேல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சீரமைக்க வேண்டும்.

பியூஷ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம்
பியூஷ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம்

உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5% வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடவும்" என முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ’பெண் எம்பிக்கள் போகப்பொருள் அல்ல...’ - பொங்கிய ட்விட்டர்வாசிகள்... வருத்தம் தெரிவித்த சசி தரூர்

Last Updated :Nov 29, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.