சென்னை மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் சைக்கிளில் சென்றவர் பலி

author img

By

Published : May 12, 2022, 12:26 PM IST

சென்னை மாநகராட்சி குப்பை லாரி சைக்கிளில் சென்ற நபர் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை அமைந்தகரையில் நள்ளிரவில் சைக்கிளில் சென்றவர் மீது மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் சமபவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை: அமைந்தகரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசா கார்டன் மெயின் ரோட்டில் எச் பி பெட்ரோல் பங்க் பின்புறம் நேற்றிரவு ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பக்கம் அதிவேகமாக வந்த சென்னை மாநகராட்சி குப்பை அள்ளும் லாரி அவர் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தெலங்கானாவில் கோர லாரி விபத்து!- பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.