அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சிறப்பு வாய்ப்பு!

author img

By

Published : Sep 24, 2021, 4:08 PM IST

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை: அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொறியியல் கல்லூரிகளில் 2001ஆம் ஆண்டு முதல் படித்து அரியருடன் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி 20 ஆண்டுகளாக பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாதம் நடக்கும் செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதலாம். தேர்வு எழுத விரும்புபவர்கள் இன்று (செப்.24) முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தேர்வர்கள் https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் ஒவ்வொரு தாளுக்கும் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். தேர்வு அட்டவணை, தேர்வு நடைபெறும் முறை, தேர்வு மையம் தொடர்பாக அக்டோபர் மாதம் இறுதியில் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.