தமிழ்நாட்டில் புதிதாக 2,654 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Jul 4, 2022, 8:44 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 2,654 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,654 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 30 ஆயிரத்து 31 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 2,652 நபர்களுக்கும், ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் என 2,654 நபர்களுக்கும் மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 60 லட்சத்து 94 ஆயிரத்து 962 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 34 லட்சத்து 85 ஆயிரத்து 429 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,543 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 31 ஆயிரத்து 787 என உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 1,066 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 375 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 144 நபர்களுக்கும் திருவள்ளூரில் 135 நபர்களுக்கும் திருச்சியில் 102 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் நோய் தொற்றானது பரவி வந்துள்ளது.

பரிசோதனை செய்பவர்களில் மாநில அளவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை எட்டு சதவீதமாக உள்ளது. மாநில அளவில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 14.9 சதவீதம், திருநெல்வேலி மாவட்டத்தில் 13.4 சதவீதம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12.8 சதவீதம், சென்னை மாவட்டத்தில் 12 சதவீதம், கோயம்புத்தூரில் 11.4 சதவீதம், ராணிப்பேட்டையில் 11.6 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 .5 சதவீதம் என வேகமாக பரவிவருகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,672 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.