மயில் மீது மோதிய திருப்பதி, புதுச்சேரி ரயில் தாமதம்

author img

By

Published : Sep 1, 2022, 4:52 PM IST

Updated : Sep 1, 2022, 9:26 PM IST

மேல்மருவத்தூர் அருகே ரயில் மோதி மயில் உயிரிழப்பு

திருப்பதி- புதுச்சேரி ரயில் மேல்மருவத்தூர் அருகே பாதையில் குறுக்கிட்ட மயில் மீது மோதியது. இதில் மயில் உயிரிழக்க , அதை அப்புறப்படுத்திய பிறகு ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது

செங்கல்பட்டு: திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் பாசஞ்சர் ரயில் இன்று காலை மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் பாதையில் குறுக்கிட்ட இரு மயில்கள் பறந்து தப்பிக்க முயன்றன.

இதில் ஒரு மயில் தப்பித்து விட, மற்றொரு மயில் ரயில் என்ஜினின் கண்ணாடியில் அடிபட்டு உயிரிழந்தது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

இறந்த மயிலை அப்புறப்படுத்திய பிறகு அரை மணி நேரம் தாமதமாக பாசஞ்சர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க: குழந்தையை நாய் கடிக்க முயன்றதில் ஏற்பட்ட தகராறு.. இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை

Last Updated :Sep 1, 2022, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.