கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Aug 29, 2022, 12:09 PM IST

கல்பாக்கம் அணு விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வந்தவர், யுவராஜ்(50). இவர் குடும்பத்துடன் அணு ஆராய்ச்சி மைய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் யுவராஜுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு யுவராஜின் மனைவி தகராறு செய்து, சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால் யுவராஜ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

பின்னர் பள்ளிக்குச் சென்று திரும்பிய யுவராஜின் மகன், தனது தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்பாக்கம் காவல்துறையினர், யுவராஜ் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க: தாய் தற்கொலை செய்து கொண்ட 2 வாரங்களில் மகனும் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.