செங்கல்பட்டு: மதுராந்தகம் நகரில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. சந்திரகுமார் என்பவர் இங்கு சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில், திருமணங்களை பதிவு செய்வதற்காக லஞ்சம் பெறப்படுவதாக நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று, செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத 2.26 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த அலுவலகத்தில், நேற்று மட்டும் 25-க்கும் மேற்பட்ட வெளி மாநில, வெளி நாட்டுத் தம்பதிகளின் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நைஜீரிய செஸ் வீராங்கனையை உற்சாகத்துடன் வழி அனுப்பிய தமிழ்நாடு போலீசார்