பள்ளிகளுக்கு விடுமுறை: மகிழ்ச்சியில் மாணவர்கள்

author img

By

Published : Nov 1, 2021, 8:42 AM IST

Schools Leave  schools leave due to rain  rain  heavy rain  பள்ளிகள் விடுமுறை  கனமழை காரணமாக பள்ளிகள் விடுமுறை  மழை  கனமழை

கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (நவ.1) முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகக் கனமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில், 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அரசு உத்தரவின்படி இன்று (நவ.1) வேலூர், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இன்று பள்ளிகள் திறப்பு - 600 நாள்கள் கழித்து பள்ளி செல்லும் மாணவர்கள்க்ஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.