புளிய மரத்தில் மோதிய கார் : சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

author img

By

Published : May 24, 2022, 6:15 AM IST

புளிய மரத்தில் கார் மோதி விபத்து

அரியலூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தில் மோதிய விபத்தில் சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

அரியலூர்: சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சென்னையில் உள்ள இன்ஃபோடெக்(Info-tech) ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி பிரியா, தாய் மஞ்சுளா, குழந்தைகள் மித்ரா, யாஷினி ஆகிய 5 பேர் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று (மே 23) புறப்பட்டு சென்னைக்கு திரும்பும் வழியில் அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி பிரியா, தாய் மஞ்சுளா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இளைய மகள் யாஷினி படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மூத்த மகள் மித்ரா லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கீழப்பழூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்டவிரோத டிஜே போதை விருந்து- போலீசை வசைபாடியவர்களுக்கு வலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.