பணியின்போது பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி!

author img

By

Published : Mar 10, 2022, 6:24 PM IST

பணியின் போது பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

அரியலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் லெட்சுமி ப்ரியா, பணியின்போது விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் லெட்சுமி ப்ரியா. நேற்று (மார்ச்.9) மாலை செந்துறை ரவுண்டா அருகில் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அரியலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையின்போது செடி கருகி போகும் பூச்சி மருந்தை குடித்ததாகக் கூறிய லெட்சுமி ப்ரியா தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் உடல் நிலை மோசமாகிய நிலையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பணியின் தொடர்பாக ஏதாவது பிரச்னை இருந்துள்ளதா? இல்லை வேறு ஏதாவது பிரச்னையா? என்ற நிலையில் பல துருவங்களில் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கொலை வேண்டாம்
தற்கொலை வேண்டாம்

மேலும், உதவி ஆய்வாளர் லெட்சுமி ப்ரியா கடந்த 5,6,7 ஆகிய தேதிகள் விடுமுறை‌ எடுத்துள்ளார். விடுமுறைக்குப் பின் அவர் காவல் நிலையம் வந்த நிலையில் உயர் அலுவலர்களிடம் அனுமதி இல்லாமல் விடுமுறை எடுத்ததாகவும் இதனையடுத்து துணை கண்காணிப்பாளரைச் சந்தியுங்கள் என அவரை உயர் அலுவலர்கள் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி
பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

இதனையடுத்து, உதவி ஆய்வாளர் திருச்சியில் உள்ள ஐஜி அலுவலகத்திற்குச் சென்று வந்துள்ளார். அப்போது திருச்சியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி மையத்திற்கு லெட்சுமி ப்ரியாவை செல்ல உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் கணவர் உயிரிழப்பு - இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆட்சியரிடம் மனைவி புகார்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.