பாய்ஸ் விம்பிள்டன் - பட்டம் வென்றார் இந்திய வம்சாளி வீரர்

author img

By

Published : Jul 12, 2021, 7:04 AM IST

சமீர் பானர்ஜி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பாய்ஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வம்சாவளி வீரர் சமீர் பானர்ஜி, சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டன்: விம்பிள்டன் பாய்ஸ் ஒற்றையர் பிரிவில் இன்று (ஜூலை 11) நடைபெற்ற இறுதிப்போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் சமீர் பானர்ஜி, அமெரிக்காவைச் சேர்ந்த விக்டெர் லிலோவ் உடன் மோதினார்.

இப்போட்டியில், சமீர் பானர்ஜி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் விக்டெரை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்தப்போட்டி ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பாய்ஸ் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை.

இதையும் படிங்க: ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.