ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்

author img

By

Published : Sep 15, 2022, 7:15 PM IST

Updated : Sep 15, 2022, 7:34 PM IST

ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜாம்பவான் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த ஜாம்பவான் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில், ’இத்தனை காலம் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் ஏடிபி தொடர் - லேவர் கோப்பை தனது இறுதி தொடராக இருக்கும் என அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ரோஜர் பெடரர் 8 முறை விம்பிள்டன் , 6 முறை ஆஸ்திரேலிய ஓபன் , 5 முறை அமெரிக்க ஓபன் , 1 முறை பிரெஞ்ச் ஓபன் என 20 கிராண்ட்ஸ் ஸ்டாம் பட்டங்களை வென்றவர்.

தனது டென்னிஸ் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 310 வாரங்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்து அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். இதில் 237 வாரங்கள் தொடர்ச்சியாக நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக கடந்த 2021ல் அவதிப்பட்டு வந்த அவர் , தற்போது 41 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் ராபின் உத்தப்பா

Last Updated :Sep 15, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.