லண்டன்: கடந்த ஆகஸ்ட் 21 அன்று இங்கிலாந்து நாட்டின் ராட்லெட்டில் நடைபெற்ற மிடில்செக்ஸ் போட்டியில் விளையாடியபோது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். தொடையில் காயமடைந்த உமேஷ் யாதவ், பிசிசிஐ மருத்துவக் குழுவின் உதவியுடன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மிடில்செக்ஸ் கவுண்டி போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் விலகியுள்ளதாக அதன் கிளப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 34 வயதான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் 158 விக்கெட்டுகளையும் 75 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுமா... பயிற்சியாளரை மாற்றிய பஞ்சாப் கிங்ஸ்