இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்தானது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, புஜாரா மற்றும் மொயின் அலி ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தனர்.
இங்கிலாந்து, இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடிய சாம் கரன் அவர்களுடன் வரவில்லை. இந்த நிலையில், அவர் இன்று (செப்.15) ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளார்.
அவர் 6 நாள்கள் தனிமையில் இருக்கவுள்ளார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் உடனான முதல் ஆட்டத்தில் அவர் விளையாட மாட்டார்.
ஏற்கெனவே, பாப் டூ ப்ளசிஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஏராளமான சவால்கள் உள்ளன.
இதையும் படிங்க: US OPEN: ஜோகோவிச் கனவு நொறுங்கியது; முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றார் மெட்வெடேவ்!