இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான சி.ஏ.சி குழு, அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்தது. இதற்காக நடைபெற்ற நேர்காணலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹேசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி உள்ளிட்ட ஐந்து பேர் பங்கேற்றனர். இறுதியில், கபில்தேவ் தலைமையிலான குழு ரவி சாஸ்திரியின் ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டித்து மீண்டும் அவரையே பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தது.
இதனிடையே, தங்களது முடிவுகளை கபில்தேவின் குழு பிசிசியிடம் கடிதம் மூலமாக சமர்பித்தது. அதில், ரவி சாஸ்திரி முதலிடத்திலும், மைக் ஹேசன் இரண்டாவது, டாம் மூடி மூன்றாவது இடத்திலும் இருந்தனர். அதில், மைக் ஹேசனின் பெயரில் எழுத்துப்பிழை இருந்ததால், நெட்டிசன்கள் கபில் தேவின் சி.ஏ.சி குழுவை கலாய்த்துவருகின்றனர்.